பார்வைக்கு:
இராமநாதபுரம்ன்னா எல்லாருக்கும் இளக்காராதேன்...
தமிழ்நாடு அரசு தமிழ் இலக்கியத்துல
வர்ற ஐவகை நிலங்களின் பேரில்
ஐந்து பூங்கா அமைக்கப்
போறதா ஒரு அறிவிப்பப் பாத்தேன்.
மலையும் மலையும் சேர்ந்த
குறிஞ்சிப் பூங்கா நீலகிரியாம்.
காடும்
காடும் சேர்ந்த
முல்லைப்பூங்கா கோயமுத்தூராம்.
வயலும் வயலும் சேர்ந்த
மருதப்பூங்கா தஞ்சாவூராம்.
கடலும் கடலும் சேர்ந்த நெய்தல்
பூங்கா நாகப்பட்டினமாம்.
கடைசியில சொல்லியிருக்காங்க பாருங்க பாலையும் பாலைவனமும் சேர்ந்த பாலைப்பூங்கா இராமநாதபுரமாம் அடப்பாவிகளா,
கடைசியிலே இராமநாதபுரத்த
பாலைவனமுன்னே முடிவு பண்ணிட்டிங்களா?
அது என்னன்னு தெரியல
ரொம்பக்காலமா இராமநாதபுரம்னா எல்லோருக்கும் ஒரு இளக்காரம்தேன்.
படத்துல கூடஎன்னவோ இராமநாதபுரத்த ஒரு தண்ணியில்லா காடு மாதிரியும் மனுசங்க குடியிருக்கவசதியில்லாததும் மாதிரிதான்காட்டுறாங்க. அவங்களுக்கெல்லாம்
உண்மையை புரிய வைக்க
வேண்டியது இந்த
இராமநாதபுரத்துக்காரன் கடமை.
தமிழ்நாட்டுலேயே மிக நீளமான
கடற்கரை கொண்ட மாவட்டம்
இராமநாதபுரம்தேன்.
வடக்கே தொண்டியிலிருந்து ஆரம்பிச்சா தெக்கே வேம்பார்
வரைக்கும் இராமநாதபுரம்
மாவட்டம்தேன்.
சுமாரா ஒரு 250
கீமீட்டர் நீளம் இருக்கும்.
இந்தளவுக்கு நீளம் நாகப்பட்டினத்தில
கிடையாது.
இருந்தாலும் அது நெய்தல்
பூங்காவாம
்
என்னா வில்லத்தனம்
பாருங்க.
தமிழ்நாட்டுலேயே மிகநீளமான கடல்
பாலம் அது இராமநாதபுரம் பாம்பன்
பாலம்தேன்.
கப்பல் ஏதும் வந்தா வெள்ளைக்காரன் போட்ட
தூக்குபாலம் திறந்து கப்பலுக்கு வழிவிடுற அழக கண்ணுகொட்டாம
பாத்துகிட்டே இருக்கலாம்
.
வெள்ளைக்காரன்னு சொன்னதும்
ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருது.
முதல் முதலா வெள்ளைக்காரன்
ஆதிக்கத்த எதுத்து வீரபாண்டிய
கட்டபொம்மன்
“கிஸ்தி திரை வரி வட்டின்னு பேசுனாரு பாருங்க
அந்த வீரக்காட்சி நடந்த இடம்
இராமநாதபுரம் இராமலிங்க விலாசம்
அரண்மனையிலதேன்.
அப்புறம்,
இன்னும் இலங்கையில கஷ்டப்படுற
தொப்புள் கொடித்தமிழன்
தமிழ்நாடு வந்தா அவன முத
முதலா அரவணைச்சு ஆறுதலும்
உதவியும் செய்யுறது இராமநாதபுரத்துக்காரன்தேன்.
தமிழ்நாட்டுலேயே பெரிய கண்மாய்
அது ஆர் எஸ் மங்கலம் கண்மாய்தான்.
இன்னும் களரி கண்மாய்.
சக்கரக்கோட்டை கண்மாய், பெரிய
கண்மாய்ன்னு கண்மாய் நிறைஞ்ச
ஊரு இராமநாதபுரம்தான்.
நோச்சி ஊரணி, மல்லிகை கண்மாய், அல்லி குள்ம்,வாகை குளம், தாமரை குளம்னு ஊரணி,கண்மாய், குளம் இங்க தாண்டி அதிகம் ..
மதுரை மல்லிய விட வாசம்
உள்ளது எங்க
இராமநாதபுரத்து மண்டபம்
மல்லி.
எங்க ஊருல விளையுற
மொளகாய் ஆந்திர மிளகாயவிடக்
காரம் உள்ளது.
தென்னந்தோட்டம்
ஏராளம் இங்கே. இதெல்லாம்
பாலைவனத்துல கிடைக்குமா என்ன?
வேடந்தாங்கலுக்கு பறவைகள்
வர்றதுல்லாம் பழய காலம் இப்ப
வெளிநாட்டு பறவைங்க
வர்றதுல்லாம் இராமநாதபுரம்
கமுதிக்கு பக்கம்
சித்திரங்குடி அப்புறம்
சாயல்குடி பக்கம் மேலச்செல்வனூர்
மொத்ததுல பறவைகள்
சரணாலயமய்யா இராமநாதபுரம்.
தமிழ்நாட்டுலேயே முதல்
முதலா வந்த தனியார் பொறியியல்
கல்லூரி அது கீழக்கரை முகமது சதக்
பொறியியல் கல்லூரிதான்.
அது மட்டுமா துபாயில
இருக்கிற பெரிய கம்பெனியான இ டி ஏ
அஸ்கான், மெல்கோ இந்தியாவுல
பெரிய கட்டுமான நிறுவனமான ஈஸ்ட் கோஸ்ட் கம்பெனி இது எல்லாம்
இராமநாதபுரத்துக்காரங்களுதுதான்
்்...
முத்துராமலிங்கதேவர். இமானுவேல் தேவேந்திரர்...(கலவரம் தேன்)்
்
இந்திய அணுவியல் திலகம்
அய்யா அப்துல் கலாம..
்
செத்துக் கொடை கொடுத்த சீதக்காதி
இந்தியாவிலேயே சிறந்த நடிகர்
விருது வாங்கிய கலைக்குடும்பம்
கமல்ஹாசன்
சாருஹாசன்
சுஹாசினி
விக்ரம்
அரசியல் விமர்சகர் சோ ராமசாமி
வாழைப் பழக்காமடி செந்தில்
ராஜ் கிரன்
இளைய தளபதி விசய் தம்பியோட
அப்பா சந்திரசேகர், சீமான்..்
இவங்கல்லாம். ்
இராமநாதபுரத்துகாரங்கதான்.
இன்னும் சொல்லிகிட்டே போகலாம்
அப்புறம் அது தொடர் பதிவாயிடும்.
அதுனால இதோட நிறுத்திக்கிறேன்.
ஒன்னு மட்டும் சொல்லுறேன் இந்த
சேது சமுத்திரம் திட்டம் மட்டும்
நிறைவேறினாப் பாருங்க.
இராமநாதபுரத்தில
வேலைதேடி வெள்ளைகாரனுக
எல்லாம் வந்திடுவான்
.
என்ன குடிக்க
தண்ணி கிடைக்கிறது கொஞ்சம்
கஷ்டம். அதுக்காக எங்கே
ஊரை பாலைவனம்ன்னுஉ சொல்லுறதுல்லாம்
ரொமப்வே ஓவரு.
பாண்டியரின் நீர் மேலாண்மை நடந்த இடமும் நம்ம இராமநாதபுரம்தேன்...
No comments:
Post a Comment